Wednesday, January 19, 2011

வெண் பொங்கல்

தேவையான பொருட்கள்

பச்சரிசி                                           - 1/2 கிலோ
பயற்றம் (பாசி) பருப்பு              - 200 கிராம்
முந்திரி பருப்பு                             - 100 கிராம்
மிளகு                                               - 1 ஸ்பூன்
சீரகம்                                                - 1 ஸ்பூன்
உப்பு                                                  - தேவையான அளவு
நெய்                                                  - தேவையான அளவு
இஞ்சி                                               - சிறு துண்டு
                        பாசி பருப்பை இரும்புசட்டியில் போட்டு சிவப்பாக வறுத்து அரிசியுடன் கலந்து நன்றாக அரிசியையும் பருப்பையும் கல் அரித்து இரண்டு மூன்று தரம் அலம்பிவிட்டு பாத்திரத்தில் போட்டு 6 டம்பளர் தண்ணீர் விட்டு (1 டம்பளர் அரிசி எடுத்தால் 3 டம்பளர் தண்ணீர் விட வேண்டும்.  பெருங்காயம், உப்பு, இஞ்சி, எல்லாவற்றையும் சேர்த்து குக்கரில் வைக்கவேண்டும்.  
3 அல்லது 4 விசில் வந்தவுடன் இறக்கி வைத்து விடவேண்டும்.  ஒரு வாணலியில் நெய் ஊற்ற வேண்டும். நெய் காய்ந்ததும், மிளகை போடவேண்டும்.
மிளகு வெடிக்க தொடங்கியதும், சீரகத்தை போட்டு, உடனேயே முந்திரி பருப்பையும் சிறிதளவு கறிவேப்பிலையையும் போட வேண்டும்.
முந்திரி பருப்பு சிவந்ததும் இறக்கி பொங்கலில் ஊற்றி, நன்றாக கிளறி கொடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment