Sunday, January 23, 2011

ரவைப் பொங்கல் 

தேவையான பொருட்கள்

ரவை                                            - 1/2 கிலோ
பயற்றம் (பாசி) பருப்பு              - 200 கிராம்
முந்திரி பருப்பு                             - 50 கிராம்
மிளகு                                               - 1 ஸ்பூன்
சீரகம்                                                - 1 ஸ்பூன்
உப்பு                                                  - தேவையான அளவு
நெய்                                                  - தேவையான அளவு
இஞ்சி                                               - சிறு துண்டு 
கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, கறிவேப்பில்லை ஒரு கொத்து.
                        பாசி பருப்பை முக்கால் வேக்காடு வேக வைத்து கொள்ள வேண்டும்.  ஒரு வாணலியில் நெய் ஊற்ற வேண்டும். நெய் காய்ந்ததும், மிளகு சீரகத்தைப் போடவேண்டும். வெடித்ததும் முந்திரிப் பருப்பைப் போட வேண்டும்.  பிறகு மெல்லியதாகச் சீவிய இஞ்சித் துண்டுகளைப் போட வேண்டும்.  கறிவேப்பில்லையை போட்டு 3 டம்பளர் தண்ணீர் விட்டு, உப்பை போட்டு கொதிக்க விட வேண்டும்.
(1 டம்பளர் ரவை எடுத்தால் 3 டம்பளர் தண்ணீர் விட வேண்டும்)

தண்ணீர் கொதிக்க தொடங்கியதும், ரவையைக் கொட்டிக் கட்டிவிடாமல் கிளறி விட வேண்டும். 
ரவை நன்றாக வெந்ததும், பாசிபருப்பை போட்டுக் கிளறி, எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு இறக்கி விட வேண்டும்.

No comments:

Post a Comment