Sunday, June 26, 2011

தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்:
                   மெல்லிய ரக அரிசி - 500 கிராம் 
                    தக்காளி - 200 கிராம் 
                    தேங்காய் ஒரு மூடி 
                    இஞ்சி சிறு துண்டு
                    பூண்டு 8 பற்கள்
                    சீரகம் ஒன்றரை ஸ்பூன் 
                    வெங்காயம் - 50 கிராம் 
                    பச்சை மிளகாய் ஏழெட்டு
                    பட்டை சிறு துண்டு
                    ஏலக்காய் ஐந்து
                    கிராம்பு ஐந்து 
                    நல்லெண்ணெய் - 100 மில்லி 
                    உப்பு தேவையான அளவு 
         தேங்காயை துருவி பால் எடுத்து கொள்ள வேண்டும்.  தக்காளியை வெட்டி வைத்து கொள்ள வேண்டும். 
          இஞ்சி, பூண்டு, சீரகம் ஆகியவற்றை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.  வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை இலேசாக தட்டி அரைத்து கொள்ள வேண்டும். 
          பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ச்ச வேண்டும். 
           எண்ணெய் காய்ந்ததும், பட்டை, ஏலம், கிராம்பு, ஆகியவற்றை போட்டு பொரிக்க வேண்டும்.  பொரித்தும், அரைத்த பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகத்தை போட்டு வதக்க வேண்டும்.  வாசனை வந்ததும், தக்காளி பழ துண்டுகளை போட வேண்டும்.
           தக்காளி நன்றாக வதங்கியதும், தேங்காய் பாலும், நீருமாக ஒரு லிட்டர் ஊற்றி, அரிசியை போட்டு வேக விட வேண்டும்.

No comments:

Post a Comment