தேவையான பொருட்கள்:
எள்ளு - 250 கிராம்
அரிசி - 400 கிராம்
உளுத்தம் பருப்பு இரண்டு ஸ்பூன்
மிளகாய் வற்றல் எட்டு
பெருங்காயம் கொட்டை பாக்கு அளவு
எண்ணெய் ஒரு கரண்டி
நெய் இரண்டு ஸ்பூன்
பச்சை மிளகாய் ஆறு
உப்பு தேவையான அளவு
எள்ளு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவைகளை வறுத்து, உப்பு சேர்த்து, நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
எண்ணெயையும், நெய்யையும் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் இவற்றை போட்டு தாளித்து கொள்ள வேண்டும்.
சாதத்தை ஆற வைத்து, அதன் மீது எள்ளு பொடியை தூவி, தாளித்து வைத்துள்ளதையும் கொட்டி கலந்து கொள்ள வேண்டும். தாளிக்கும் போது சிறிதளவு கறிவேப்பிலையையும் கிள்ளி போட்டு கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment