Sunday, June 26, 2011

எள்ளு சாதம்

தேவையான பொருட்கள்: 
                     எள்ளு - 250 கிராம்
                     அரிசி - 400 கிராம் 
                     உளுத்தம் பருப்பு இரண்டு ஸ்பூன் 
                     மிளகாய் வற்றல் எட்டு
                     பெருங்காயம் கொட்டை பாக்கு அளவு 
                      எண்ணெய் ஒரு கரண்டி
                      நெய்  இரண்டு ஸ்பூன் 
                       பச்சை மிளகாய் ஆறு
                       உப்பு தேவையான அளவு 
           எள்ளு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவைகளை வறுத்து, உப்பு சேர்த்து, நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
           எண்ணெயையும், நெய்யையும் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் இவற்றை போட்டு தாளித்து கொள்ள வேண்டும். 
           சாதத்தை ஆற வைத்து, அதன் மீது எள்ளு பொடியை தூவி, தாளித்து வைத்துள்ளதையும் கொட்டி கலந்து கொள்ள வேண்டும்.  தாளிக்கும் போது சிறிதளவு கறிவேப்பிலையையும் கிள்ளி போட்டு கொள்ள வேண்டும்.              

No comments:

Post a Comment