தேவையான பொருட்கள்:
புலவு அரிசி
பச்சை மிளகாய் - 20
வெங்காயம் - 50 கிராம்
பச்சை கொத்துமல்லி - ஒரு கட்டு
பாதாம் பருப்பு - 4
பிஸ்தா பருப்பு - 10
தேங்காய் ஒரு மூடி
பட்டை ஒரு துண்டு
வெங்காயம் - 10
கிராம்பு - 10
நெய் - 200 மில்லி
உப்பு தேவையான அளவு
அரிசியை ஊற வைத்து கொள்ள வேண்டும்.
தேங்காயை துருவி பால் எடுத்து கொள்ள வேண்டும்.
பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் மல்லி தழையையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
பாதாம் பருப்பு, பிஸ்தா இரண்டையும் சேர்த்து மையாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நெய்யை விட வேண்டும்.
நெய் காய்ந்ததும், பட்டை, ஏலம், கிராம்பு போட்டு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட வேண்டும்.
அவை வதங்கியதும், அரைத்த பொருட்களை போட்டு சற்று நேரம் கிண்ட வேண்டும்.
பிறகு அரிசியை போட்டு புரட்டி, தேங்காய் பாலும் நீருமாக இரண்டு லிட்டர் ஊற்றி வேக விட வேண்டும்.